டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சில விமான சேவைகள் தாமதமடைந்துள்ன.
இதன்காரணமாக அந்த விமான நிலையத்தில் உள்ள நான்கு ஓடு பாதைகளில் ஒரு ஓடுபாதையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், விமானம் ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாவும், அந்த விமானத்தின் சில பகுதிகள் விமான ஓடுபாதையில் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மேலதிக தவல்களை ஜப்பானின் போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கவில்லை என சர்வதேச ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன.