Site icon Tamil News

அரபிக்கடலில் உருவானது பிபோர்ஜாய் புயல்!

அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (05.06.2023) மாலை 05:30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.

இன்று (06.06.2023) காலை 05:30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குறித்த இடத்தில் நிலவி வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Exit mobile version