Site icon Tamil News

இலங்கையில் விஷ வாயு கசிவால் இருவர் பலி: பின்னணியில் வெளியான அதிர்ச்சித் தகவல்

மாலம்பே, கஹந்தோட்ட வீதியில் உள்ள வீடொன்றில் விஷ வாயுவை சுவாசித்த இருவர் நேற்று (13) உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த வீட்டிலிருந்த இரசாயனத்தைப் பயன்படுத்தி ஐஸ் ரக போதைப்பொருளைத் தயாரிக்க முயற்சி செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (14) காவல்துறை விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினருடன் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் குறித்த இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

எவ்வாறாயினும், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் குறித்த வீட்டின் இரசாயனங்கள் இருந்த அறைக்குள் வந்து சோதனையிட்டதன் பின்னர், அந்த இரசாயனங்கள் ஐஸ் ரக போதைப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுபவை என அடையாளம் கண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version