Site icon Tamil News

கொழும்பில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் இரா.சம்பந்தனின் பூதவுடல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் இன்றைய தினம் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

கொழும்பு – பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில், இன்று காலை 9மணி முதல் அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதேநேரம் நாளைய தினம் நாடாளுமன்றில் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

நாளை பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அவரது சொந்த ஊரான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

Exit mobile version