Site icon Tamil News

இன்டர்போல் உதவியுடன் இலங்கையில் இந்தியர்கள் இருவர் கைது

இந்தியாவை சேர்ந்த புக்கி சௌரப் சந்திரகர் மற்றும் அவரது உதவியாளர் ரவி உத்பால் ஆகியோர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சௌரப் சந்திரகர், தாவூத் இப்ராஹிம் என்ற இந்திய பாதாள உலகத் தலைவரின் உதவியுடன், இணையத்தில் சட்டவிரோதமான சூதாட்டத் தளத்தை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களிலும், கிரிக்கெட், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளிலும் பந்தயம் கட்டுவதற்கும் சட்டவிரோதமானது என்றும் இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க இருவரும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அதிகாரிகள் அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version