Site icon Tamil News

கச்சத்தீவு கடற்பகுதியில் இரு இந்திய மீனவர்கள் மாயம்!

கச்சத்தீவு கடற்பகுதியில் இந்திய மீன்பிடி படகு விபத்துக்குள்ளானதில் இரண்டு இந்திய மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

நான்கு இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அங்கு அந்த படகில் இருந்த இரண்டு மீனவர்கள் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர்.

காணாமல் போன இந்திய மீனவர்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Exit mobile version