Site icon Tamil News

இலங்கை : கொழும்பு துறைமுகத்தில் உல்லாச சுற்றுலாவில் ஈடுபட்ட அமைச்சர்கள்!

துறைமுக அதிகாரசபையின் இரண்டு சிறிய படகுகளில் 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்தில் உல்லாச சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

நேற்று பிற்பகல் துறைமுக இராஜாங்க அமைச்சர்  பிரேமலால் ஜயசேகர அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒதுக்கப்பட்ட இரண்டு கப்பல்கள் மூலம் இந்த இன்பப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுவிற்கு அனைத்து உணவு மற்றும் பானங்கள் துறைமுக அதிகாரசபையால் வழங்கப்பட்டுள்ளன.

புத்தாண்டின் ஆரம்பத்தை முன்னிட்டு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுக வளாகத்தில் ஒரு குறுகிய சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்திருப்பதால், அதில் பங்கேற்குமாறு துறைமுக இராஜாங்க அமைச்சர் திரு.பிரேமலால் ஜயசேகர உறுப்பினர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பியிருந்ததாகவும், இதற்கமைய குறித்த நிகழ்வில் அமைச்சர்கள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version