Site icon Tamil News

கொழும்பில் உள்ள மிக உயரமான கட்டிடத்தில் இருந்து குறித்து சிறுவர்கள் இருவர் பலி

15 வயதுடைய சிறுவனும், மாணவியும் கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற இருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version