Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் கோர விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி

சிட்னியின் தெற்கு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 09 மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மெலைசாவில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததாகவும், 9 வயது சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நேற்று இரவு 09.50 மணியளவில் குறித்த குழுவினர் பயணித்த கார் மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மற்றொரு காருக்கு போட்டியாக அதிவேகமாக ஓட்டி இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காரை ஓட்டிச் சென்ற 33 வயதுடைய நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 9 வயது சிறுமி அவரது மகள் என்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version