Site icon Tamil News

ஆஸ்திரேலியாவுடனான விமான சேவைகளை அதிகரிக்க துருக்கி ஏர்லைன்ஸ் திட்டம்

ஆஸ்திரேலியாவுடனான விமான சேவைகளை அதிகரிக்க துருக்கி ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிறுவனம் முன்வைத்த முன்மொழிவுக்கு ஆஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, துருக்கி ஏர்லைன்ஸ் 2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவிற்கும் அங்கிருந்தும் வாரந்தோறும் 35 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் மற்றும் பெர்த்தில் இருந்து அந்த விமானங்களை இயக்க துருக்கி ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, கத்தார் ஏர்வேஸ் நிறுவனமும் ஆஸ்திரேலியாவுக்கான பயண நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தது.

ஆனால் அதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இது தொடர்பில் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Exit mobile version