Site icon Tamil News

துருக்கி உளவுத்துறை முயற்சி – 26 சிறை கைதிகள் பரிமாற்றம்

துருக்கி நாட்டு உளவுத்துறை மேற்கொண்ட முயற்சியால், 26 சிறை கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றது.

அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உட்பட 7 நாடுகளுக்கு இடையே 26 சிறை கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றது.

ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச், முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் பால் வீலன் உள்பட 3 பேர் அமெரிக்கா திரும்பினர்.

அதேபோல் வெவ்வேறு நாட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்யர்கள் 10 பேரும், ஜெர்மனி நாட்டவர் 13 பேரும், துருக்கிக்கு அழைத்து வரப்பட்டு அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாஸ்கோ திரும்பிய ரஷ்யர்களை அதிபர் புடின் நேரில் சென்று வரவேற்றார்.

Exit mobile version