Site icon Tamil News

கைதுக்கு பின் முதல் முறையாக X இல் பதிவிட்ட ட்ரம்ப்!

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து முதல்முறையாக எலான் மஸ்கின்  X இல் பதிவொன்றை இட்டுள்ளார்.

ஜார்ஜியா தேர்தல் சீர்குலைவு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஃபுல்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தால் வெளியிடப்பட்டஷாட்டை டிரம்ப் வெளியிட்டார்.

“இன்று, ஜார்ஜியாவின் ஃபுல்டன் கவுண்டியில் உள்ள மோசமான வன்முறை சிறையில், எந்த குற்றமும் செய்யாத போதிலும் நான் கைது செய்யப்பட்டேன்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க மக்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியும். நடந்திருப்பது நீதியின் கேலிக்கூத்து மற்றும் தேர்தல் குறுக்கீடு என்றும்  அமெரிக்காவை காப்பாற்ற நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்” என்றும்  அவர் கூறியுள்ளார்.

ட்ரம்பின் கருத்துக்கு பதிலளித்த அவர், அடுத்த நிலை என்று எழுதினார்.

Exit mobile version