இலங்கை ரயில் சேவைகள் இன்று (07.06) ஸ்தம்பிதமடையும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இன்ஜின் ஓட்டுநர்களின் இரண்டாம் தர பதவி உயர்வு, சம்பளப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டது.