Site icon Tamil News

பிரான்ஸிற்கு பிறகு, இலங்கை, மொரிஷியஸில் UPI சேவைகள் ஆரம்பம்

பிரான்ஸில் UPI சேவைகள் தொடங்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, இலங்கை மற்றும் மொரீஷியஸ் ஆகியவை இந்திய டிஜிட்டல் கட்டண முறையைச் செயல்படுத்தும் சமீபத்திய நாடுகளாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் வெளியீட்டு நிகழ்வைக் காணச் சென்றார்.

மொரிஷியஸிலும் நேற்று ரூபே அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் UPI மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை ஒன்லைன் மூலம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

NPCI International Payments Limited மற்றும் இலங்கையில் LankaPay Pvt Ltd நிறுவனங்கள் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் 10,000 வணிக நிறுவனங்கள் தம்மை இந்த முறையில் பதிவு செய்துள்ளன.

மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் தடையற்ற கொடுப்பனவு வசதிகளுக்காக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கையை 65,000 வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version