Site icon Tamil News

அயர்லாந்து – பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் ரயில் – படகு டிக்கெட்

2023 ரக்பி உலகக் கோப்பை பிரான்சில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கிடையில் 2024 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த “செயில் அண்ட் ரெயில்” டிக்கெட்டை அறிமுகப்படுத்துவதற்கு மற்றொரு படி எடுக்க முடிவு செய்துள்ளன.

ஒருங்கிணைந்த டிக்கெட்டுகள் அடுத்த ஆண்டு முதல் இரு நாடுகளுக்கு இடையேயான முன்பதிவு மற்றும் பயணத்தை எளிதாக்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருங்கிணைந்த டிக்கெட்டுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து விருப்பங்களை கவர்ச்சிகரமான கட்டணத்தில் ஊக்குவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து இடையே பயணம் செய்பவர்கள் மற்றும் தங்கள் பயணத்தைத் தொடங்க அல்லது தொடர படகு மற்றும் ரயில் இரண்டையும் பயன்படுத்துபவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version