Site icon Tamil News

ஜேர்மனில் 24 மணிநேர வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ரயில் சாரதிகள்!

ஜேர்மனியின் பல ரயில் சாரதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், மற்றுமொரு வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகிறது.

வேலைநேரம், ஊதியம் தொடர்பான கடுமையான சவால்களுக்கு மத்தியில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

GDL தொழிற்சங்கம் Deutsche Bahn இன் பயணிகள் ரயில்களின் ஓட்டுநர்களை அதிகாலை 2 மணிக்கு (0100 GMT) தொடங்கி 24 மணிநேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையில், சரக்கு ரயில்களின் ஓட்டுநர்கள் மாலை 6 மணி முதல் வேலையை விட்டு வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம் செய்வதற்கு முன் 48 மணி நேர அறிவிப்பை இனி கொடுக்க மாட்டோம் என்று கடந்த வாரம் தொழிற்சங்க அறிவிப்புக்கு இணங்க, ஞாயிறு மாலை வெளிநடப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version