Site icon Tamil News

பக்முட்டின் பெரும் பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த வக்னர் குழுவினர்!

வாக்னர் குழுமத்தின் கூலிப்படைகள் பக்முட்டின் கிழக்குப் பகுதியின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது.

உக்ரேனியப் படைகள் நகரின் மேற்குப் பகுதியை பிடித்து, ஆற்றின் மீதுள்ள முக்கிய பாலங்களை இடித்து தள்ளியுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உக்ரேனியப் பிரிவுகள் மேற்கில் உள்ள பலமான கட்டிடங்களில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்த முடிந்ததால், இந்த பகுதி ஒரு கொலை மண்டலமாக மாறியுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிடடுள்ளது.

இது வாக்னர் படையினர் மேற்கு நோக்கி தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் எனவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

Exit mobile version