Site icon Tamil News

பிரான்ஸில் ஓய்வூதியம் பெறும் முதியவருக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் ஓய்வூதியம் பெறும் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Pontoise (Val-d’Oise) நகரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஓய்வூதியம் பெறும் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றது.

இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ பரவியதை அடுத்து, தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.

75 தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் சிக்கியிருந்த முதியவர் ஒருவர் உடல் கருகி பலியானார்.

 

Exit mobile version