Site icon Tamil News

பிரான்ஸில் பெண் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் baseball மட்டையினால் அடித்து கொலைசெய்யப்பட்டார்.

La Croix-de-la-Rochette (Savoie) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், கலை 9.30 மணி அளவில்அவரை நெருங்கிய நபர் ஒருவர் குறித்த பெண் பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார்.

மறைந்திருந்து Baseball மட்டையினால் தாக்கியதில் நிலைகுலைந்த அவர், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

பின்னர் மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்குகொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய நபர் தேடப்பட்டு வருகிறார். 60 வயதுடைய ஒருவரே தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version