Site icon Tamil News

பிரித்தானியாவில் மீண்டும் போராட்டத்தில் இறங்கிய ஜுனியர் வைத்தியர்கள்!

இங்கிலாந்தில் உள்ள ஜூனியர் வைத்தியர்கள் தங்கள் ஐந்தாவது சுற்று வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

சில புதிய மருத்துவர்கள் தங்கள் முதல் NHS வேலைகளைத் தொடங்கிய சில நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் ஊதியம் தொடர்பான பிரச்சினை பூதாகரமாக மாறியுள்ள நிலையில், அரசாங்கத்துடனான பேச்சுவார்தையும் தோல்வியை தழுவியுள்ளது.

இந்நிலையில், ஜுனியர் வைத்தியர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இது குறித்து பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் ஜூனியர் டாக்டர்கள் கமிட்டியின் இணைத் தலைவர்களான டாக்டர் ராபர்ட் லாரன்சன் மற்றும் டாக்டர் விவேக் திரிவேதி ஆகியோர் கூறுகையில்,எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களின்  எதிர்காலத்திற்காக வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version