Site icon Tamil News

இலங்கையில் நடந்த சோகம் – சுற்றுலா சென்ற இளம் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்

கொஸ்லந்த, தில்லும நீர்வீழ்ச்சிக்கு அருகில் முகாமிட்டிருந்த இளம் தம்பதியரை காட்டு யானை தாக்கியதில் யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளளார்.

இன்று (12) அதிகாலை இந்த சம்வபவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாத்தறை கெகுனதொர பிரதேசத்தில் வசித்து வந்த 23 வயதுடைய ஜி தருக்க்ஷி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

வாரியபொல பகுதியைச் சேர்ந்த கே.ஏ. தனுஷ்க (22) என்பவரே காயமடைந்துள்ளார்.

இவர்கள் கொஸ்லந்தவில் உள்ள தியலும பகுதிக்கு சுற்றுலா வந்து இரவு முகாமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version