Site icon Tamil News

பிரான்ஸில் பாடசாலை விட்டு வீடு திரும்பிய சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் பாடசாலை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 14 வயதுச் சிறுவன் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் வால் து மார்ன் நகரில் இடம்பெற்றுள்ளது. மாலை 5.30 மணி அளவில் குறித்த சிறுவன் மின்சார ஸ்கூட்டர் (trottinette) ஒன்றில் பயணித்த நிலையில், கார் ஒன்றுடன் மோதுண்டுள்ளார்.

பாதசாரிகள் கடவையில் குறித்த சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்டபோது, Fiat 500 ரக கார் சிறுவனை மோதித்தள்ளியது.

தீயணைப்பு படையினர் விரைவாக செயற்பட்டபோதும் சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போனது.

சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தினால் அதிர்ச்சிக்குள்ளான சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version