Site icon Tamil News

பிரான்ஸில் 2 துண்டுகளாக மீட்கப்பட்ட நெதர்லாந்து சுற்றுலாப்பயணியின் உடல்கள்!

பிரான்ஸில் ஆண் ஒருவரது சடலம் இரண்டு துண்டுகளாக மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் Wimereux (Pas-de-Calais) நகர கடற்கரையில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவரால் கடந்த சனிக்கிழமைகாலை இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

ஆண் ஒருவரது சடலம் சிதைக்கப்பட்ட நிலையில் இரண்டு துண்டுகளாக கிடந்துள்ளது. தண்ணீருக்குள் இருந்து அழுகி கரை ஒதுங்கியதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்தது.

இடுப்புப்பட்டியுடன் கூடிய காற்சட்டை அணிந்திருந்ததாகவும், வானம் ஒன்றில் சாவி அதில் மாட்டப்பட்டிருந்ததாகவும், வேறு எந்த அடையாள அட்டைகளும் சடலத்துடன் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தற்கொலை அல்லது கொலை செய்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Exit mobile version