Site icon Tamil News

இலங்கையில் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்கங்கள்!

அரச மற்றும் மாகாண சேவைகள் சங்கம் நாளைய தினம் (12.12) சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அழைப்பாளர் சந்தன சூரியராச்சி இதனை தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக குறைந்தபட்சம் 20,000 ரூபாவை வழங்குமாறு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை சங்கங்களின் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், டிசம்பர் 13ம் திகதி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், ஒரே நாளில் சுகயீன விடுப்பு அறிக்கையை முடித்துக் கொள்ள மாட்டோம் என தொழிற்சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

Exit mobile version