Site icon Tamil News

இலங்கையில் கிழமையில் இருநாட்களில் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

இலங்கையில் சம்பள உயர்வு கோரி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில்  திங்கட்கிழமை (08) மற்றும் செவ்வாய்கிழமை (09) ஆகிய இரண்டு நாள் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பல மாநில மற்றும் அரை மாநில தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம், ஐக்கிய சுகாதார ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய அதிகாரிகள் சபை உறுப்பினர்கள் பலர் இன்று மகாநாயக்க தேரர்களை சந்தித்தனர்.

அங்கு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய செயலாளர் டொக்டர் பிரபா சுகததாச, இந்த நாட்டில் சுகாதாரத் துறையை தனியார் மயமாக்கும் நோக்கங்கள் உள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாகக் குறிப்பிட்டார்.

Exit mobile version