Tamil News

விமான நிலையத்தில் இருந்து கோபமாக வெளியேறிய திரிஷா.. என்ன ஆச்சு?

விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் நடிகை திரிஷா கோபத்துடன் வேகமாக சென்றது பரபரப்பை கிளப்பியுள்ளது.

மீண்டும் சூடு பிடித்துள்ள சுசி லீக்ஸ் சர்ச்சையில், திரிஷா குறித்து படுமோசமாக சுசித்ரா பேசி வருகின்றார்.

இந்த நிலையில், அதற்கு எதிராக தனது கண்டனத்தை திரிஷா பதிவு செய்வார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், கடந்த 2 நாட்களாக அடுத்தடுத்து யூடியூப் சேனல்களில் திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் குறித்து சுசித்ரா படுமோசமாக பேசி வருவதை நிறுத்தவே இல்லை.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், விமான நிலையத்தில் நடிகை திரிஷாவை சந்தித்த செய்தியாளர்கள் அவரிடம் கில்லி ரீ ரிலீஸ் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறதே அதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்கிற கேள்வியை எழுப்ப அதற்கு பதில் சொல்லாமல் நடிகை திரிஷா விருட்டென கிளம்பி சென்று விட்டார். திரிஷா ரொம்பவே கோபத்துடன் சென்றார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Exit mobile version