Site icon Tamil News

மெக்சிகோவில் புலம்பெயர்ந்தோர் மூவர் பலி, பர் படுகாயம்!

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஓக்ஸாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இறந்தவர்களில் இருவர் நிகரகுவாவைச் சேர்ந்தவர்கள் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அதேபோல் மற்றுமொருவர் ஈக்வடாரைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்டுள்ளது.

விபத்தில் காயம் அடைந்தவர்களின் நிலை குறித்து உடனடித் தகவல் இல்லை. மெக்சிகோவைக் கடந்து அமெரிக்க எல்லையை அடைய முயலும் புலம்பெயர்ந்தோருக்கு Oaxaca ஒரு முக்கிய பாதையாகும்.

இங்கு விபத்துக்கள் இடம்பெறுவது பொதுவானவையாகும்.

 

Exit mobile version