Site icon Tamil News

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் நகரத்தில் மூன்று சடலங்கள் மீட்பு!

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் நகரத்தில் நடந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளியை கைது செய்வதற்காக பொலிஸார் நகர மையத்தை  மூடியுள்ளனர்.

சம்வத்துடன் தொடர்புடைய 31 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

“இந்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும்,  துப்பறியும் குழுவினர் சரியாக என்ன நடந்தது என்பதை கண்டுப்பிடிக்க முயற்சித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக  நாட்டிங்ஹாம் எக்ஸ்பிரஸ் டிரான்சிட் (NET) டிராம் நெட்வொர்க் “நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்திருந்தனர்.

Exit mobile version