Tamil News

போலி ஆவணங்களை பயன்படுத்தி வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களை விற்பனை செய்து போலி ஆவணங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட மூவரை பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை பிரதேசத்தில் ஒருவரிடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனம் போலியான ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து 36 மற்றும் 46 வயதுடைய 2 ஆண்கள், 36 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது, விற்பனை மற்றும் அடகு வைக்கப்பட்ட 02 வாகனங்கள், போலியான சாரதி அனுமதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு ஆண்களும் தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட பெண் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Exit mobile version