Site icon Tamil News

இலங்கையில் அச்சுறுத்தும் பாதிப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேல் மாகாணத்தில் கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

அதன்படி, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, குருணாகல், காலி ஆகிய மாவட்டங்கள் டெங்கு நோய் அபாயமிக்க மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால், பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version