Site icon Tamil News

“இந்த மே பேரணி முக்கியமானது” – மஹிந்த

இந்த ஆண்டு மே மாதப் பேரணி மிகவும் முக்கியமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எங்களிடமிருந்து திருடவும், இந்த நாட்டின் எதிர்காலத்தை அழிக்கவும் பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் இன்று திரண்டு வருகின்றன.” என்றும் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே பேரணியின் நேரடி ஒளிபரப்பு கீழே உள்ளது.

Exit mobile version