பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசி கேத்தரின் (கேட் மிடில்டன்) ஆகியோர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புரோஸ்டேட் சுரப்பி பெரிதாகிவிட்டதால், மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இளவரசி கேத்தரின் வயிற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமுடன் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.