Site icon Tamil News

மோசடி வழக்கில் திலினி பிரியமாலி விடுதலை

பணம் இல்லாத கணக்கில் இருந்து பெறுமதியான காசோலைகளை வழங்கி 80 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனத்தை மோசடி செய்த வழக்கில் திலினி பிரியமாலியை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அரச தரப்பு சட்டத்தரணி மற்றும் பிரதிவாதிகள் ஆகியோரின் வாதங்களை பரிசீலித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Exit mobile version