Site icon Tamil News

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரிக்கை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தியாக தீபம் திலீபன் நினைவுநாள் நிகழ்வுகளை தடை செய்யக்கோரி பருத்தித்துறை பொலிசார் தாக்கல் செய்த மனுவை, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (22) நிராகரித்தது.

தியாகதீபம் திலீபன் நினைவு நிகழ்வுகள், ஊர்தி பவனிகளை நடத்துவதன் மூலம் வன்முறைகள் உருவாகும் சூழல் நிலவுவதாக குறிப்பிட்டு பருத்தித்துறை பொலிசார் குறித்த மனுவை தாக்கல் செய்தனர்.

வன்முறையில் யாராவது ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய பொலிசாருக்கு அதிகாரமுள்ளதை சுட்டிக்காட்டிய பருத்தித்துறை நீதவான், அமைதியான நினைவு நிகழ்வுகளை தடுக்க முடியாதென உத்தரவிட்டார்.

1987 செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 26 ம் திகதி வரை தியாக தீபம் திலீபன் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நல்லூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version