Site icon Tamil News

களுத்துறையில் கெஹலியவிற்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (18.08) மக்கள் கையொப்ப சேகரிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி  களுத்துறை தொகுதி அமைப்பாளர் அஜித்.பி.பெரேரா இந்த கையெழுத்துப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

முறையான சுகாதார சேவையை ஏற்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து, தற்போதைய சுகாதார சேவையில் இருந்தும் தற்போதைய சுகாதார அமைச்சரையும் இராஜினாமா செய்து பொருத்தமான ஒருவருக்கு சுகாதார அமைச்சர் பதவியை வழங்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை போதனா வைத்தியசாலையில் இருந்து மருந்து பெற வந்த நோயாளர்களும், பிரதான வீதியில் பயணித்தவர்களும் இந்த கையெழுத்துப் பத்திரத்தில் கையொப்பமிடுவதைக் காணமுடிந்ததாக இன்றைய தெரண செய்தியாளர் தெரிவித்தார்

Exit mobile version