Site icon Tamil News

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விசேட வைத்தியர்கள் இருக்க வேண்டும்!

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நோய்க்கும் விசேட வைத்தியர்கள் இருப்பின் தேசிய வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய பிரதான வைத்தியசாலைகளில் நிலவும் நெரிசலை நீக்க முடியும் என கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.

அத்துடன், பொது சுகாதார அவசர நிலை மற்றும் அனர்த்த இடர் முகாமைத்துவத்திற்கு தேவையான மனித வளம் இந்த நாட்டில் மிகவும் குறைந்த மட்டத்திலேயே இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு குறித்து தேசிய கணக்காய்வு  தணிக்கை அலுவலகம் நடத்திய தணிக்கையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

எந்தவொரு தொற்றுநோயையும் எதிர்கொள்ள சுகாதார நிறுவனங்களில் போதுமான மனித வளங்கள் காணப்பட வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போதுமான மருத்துவ அலுவலர்கள் மற்றும் நிபுணர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், அனைத்து பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குனரகங்களுக்கும் மனித வளப் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆரம்ப சுகாதார சேவைக்கு அடிமட்ட மருத்துவ ஊழியர்கள் இன்றியமையாதவர்கள் என்றும், இந்த நாட்டில் அடிமட்ட மருத்துவ ஊழியர்கள் மிகவும் குறைவாகவே இருந்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை  நாட்டில் 35 விசேட வைத்திய பதவிகள் உள்ள போதிலும், ஒவ்வொரு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்திலும் போதிய நிபுணர்கள் இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version