Site icon Tamil News

யுவதியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்!

தனமல்வில – ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தாக்குதலிற்கு உள்ளான குறித்த யுவதி கான்ஸ்டபிளின் காதலி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version