Site icon Tamil News

நாட்டை வீழ்த்துவதுதான் அவர்களின் ஒரே இலக்கு – நாமல்!

நாட்டை வீழ்த்துவதுதான் போராட்ட காரர்களின் ஒரே இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும் என்று உண்மையாக போராட்டம் நடத்திய தரப்பினரைக்கூட சில அரசியல் கட்சிகள் திசை திருப்பின எனவும்,  அன்று எமது வீடுகளை எரித்தார்கள். வீடுகளை எரித்தவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் செய்யக்கூட முடியாமல் உள்ளது எனவும் தெரிவித்தார்.

ஏனெனில் அவர்கள் மீது பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு திட்டமிட்ட தரப்பினர் இன்னமும் நாடாளுமன்றுக்கு வருகைத் தந்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ  குறைந்தது அவர்களிடம் வாக்குமூலம்கூட பெறப்படவில்லை’ எனவும் சாடினார்.

Exit mobile version