Site icon Tamil News

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் உள்ள விடுதியில், போதை ஊசி ஏற்றிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண போதனா போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் நேற்று (18.07) இரவு விடுதிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பின்னர் அவரை காணாத நிலையில் தேடிச் சென்றபோது விடுதியின் ஒரு பக்கத்தில் இறந்த நிலையில் காணப்பட்டார் என சடலத்தை பார்த்தவர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

அவரின் அருகில் ஊசி மூலம் போதை ஏற்றியதற்கான அடையாளங்கள் உள்ளதாகவும் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version