Site icon Tamil News

உலகையே உலுக்கிய வாக்னர் தலைவர் ரஷ்யாவில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்

ரஷ்யாவின் கூலிப்படையின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஷின், வாக்னர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் மாஸ்கோவின் வடக்கு பகுதியில் விமான விபத்தில் அவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

விமானத்தில் வெடிகுண்டு வெடித்ததே விபத்துக்குக் காரணம் என்றும், அது மதுப்பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானத்தில் பயணித்தவர்களின் பட்டியலில் வாக்னர் தலைவரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த அனைவரின் உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், வாக்னர் தலைவரின் உடல் உள்ளதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

எனினும், ரஷிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, வேக்னரின் தலைவரும் விபத்தில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமானத்தில் பயணித்த அனைவரும் வாக்னரின் இராணுவத்தின் பலமானவர்கள் மற்றும் பிரிகோஷினின் நெருங்கியவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இறந்தவர்களில் வாக்னரின் இராணுவத்தின் துணைத் தலைவர் டிமிட்ரி உட்கினும் ஒருவர்.

எவ்வாறாயினும், விபத்தின் போது ரஷ்யாவின் கூலிப்படையின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஷின், வாக்னர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version