Site icon Tamil News

கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஐந்து அரசியல்வாதிகள் பலி

மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் மற்றும் ஒரு விமானி புதன்கிழமை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து பேரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோவின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் Boyaca திணைக்களத்தில் San Luis de Gaceno என்ற முனிசிபல் பகுதியில் கீழே இறங்கிய விமானத்தில் இருந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு ட்விட்டரில் கட்சி வருத்தம் தெரிவித்தது,

விமானம் விலாவிசென்சியோவில் இருந்து பொகோடாவிற்கு ஒரு கட்சி கூட்டத்திற்காக பறந்து கொண்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இடதுசாரி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ தனது ட்விட்டர் கணக்கில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version