Site icon Tamil News

சீனா வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய வரைபடத்தால் உலக நாடுகள் கடும் ஆத்திரம்

சர்ச்சைக்குரிய பல தீவுகள் உட்பட தென் சீனக் கடலின் 80% பகுதியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக புதிய வரைபடத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்பாட்லி மற்றும் பார்சல் ஆகிய வளங்கள் நிறைந்த தீவுகளும் சீனாவைச் சேர்ந்தவை என்பதை இந்தப் புதிய வரைபடம் காட்டுகிறது.

இதனால், சீனா தனது வரைபடத்தின் மூலம் உரிமைகளை அறிவித்துள்ள தென் சீனக் கடலை சேர்ந்த பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரைபடத்தை தவறான வரைபடமாக அறிமுகப்படுத்தி சீனா வெளியிட்டுள்ள தென் சீனக் கடலின் புதிய வரைபடம் இறையாண்மை கடல்சார் உரிமைகளை மீறுவதாக வியட்நாம் கூறுகிறது.

பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளும் சீனாவின் புதிய வரைபடத்தை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version