Site icon Tamil News

கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் கைது!

அனுராதபுரம் – யாழ்ப்பாண சந்திப் பகுதியில் சட்டவிரோதமாக கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் மாவட்ட உணவு மற்றும் மருந்து பரிசோதனை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் அனுராதபுரத்தில் பிரபலமான வைத்தியர் ஒருவரிடம் பணிப்புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 07 கருத்தடை மாத்திரைகளை 35 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த பெண் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், நீதவான் அவரை எச்சரித்து 50 ஆயிரம் ரூபாய் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.

 

Exit mobile version