Site icon Tamil News

கடவுச்சீட்டு இல்லாமல் கனடாவிற்கு பயணித்த பெண்!

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) விமானப் பணிப்பெண் ஒருவர் தனது பாஸ்போர்ட் இல்லாமல் இஸ்லாமாபாத்தில் இருந்து கனடாவின் டொராண்டோ நகருக்கு பயணித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

விமானம் டொராண்டோவில் தரையிறங்கியபோது, ​​கனேடிய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மேற்படி தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பயணிக்கு $200 அபராதம் விதித்துள்ளனர்.  டொராண்டோவுக்குச் செல்லும் PK-781 விமானத்தில் பயணித்த குறித்த பெண் தனது கடவுச்சீட்டை கராச்சி விமான நிலையத்திலேயே மறந்துவிட்டு பயணித்ததாக தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version