Site icon Tamil News

நாட்டின் இறைமையை பாதுகாக்கவே உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்டது – புட்டின்!

உக்ரைனில் போரை நடத்துவதன் மூலம் ரஷ்யா தனது “இறையாண்மை” மற்றும் “ஆன்மீக விழுமியங்களை” பாதுகாத்து வருகிறது என ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

கிரெம்ளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள  வீடியோ உரையில்,  “நாங்கள் ரஷ்யாவைக் காக்கிறோம், தாய்நாட்டிற்காக, நமது இறையாண்மை, ஆன்மீக விழுமியங்கள் மற்றும் ஒற்றுமைக்காக, வெற்றிக்காக ஒன்றாகப் போராடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இணைக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்ய ரஷ்யா ஒரு “பெரிய அளவிலான திட்டத்தை” செயல்படுத்த வேண்டும், எனவும் வலியுறுத்தியுள்ளார்.

டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் பிராந்தியங்களில் வசிப்பவர்கள் ரஷ்யாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதில் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.  சர்வதேச விதிமுறைகளின்படி முழுவதுமாக” இணைக்கப்பட்டது என்றும் புட்டின்  வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version