Site icon Tamil News

காஸா பகுதியில் தீவிரமடைந்துள்ள போர்!! நாடு திரும்ப விரும்பாத இலங்கையர்கள்

இஸ்ரேலுக்கும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் முரண்பாடு நிலவி வருகின்ற போதிலும், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எவரும் நாடு திரும்புவதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையர்கள் எவரேனும் திரும்பி வர விரும்பினால், அதற்கான அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, ஆனால் காசா பகுதிக்கு அண்மித்த பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் கூட அங்கு தங்குவதற்கு அதிக விருப்பத்துடன் உள்ளனர்.

நாடு திரும்ப விரும்பும் எந்தவொரு இலங்கையர்களுக்கும் தேவையான வசதிகளை வழங்கத் தயாராக இருப்பதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

காஸா பகுதியை அண்மித்துள்ள இலங்கையர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

Exit mobile version