Site icon Tamil News

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்த அழையா விருந்தாளி… அதிர்ச்சியில் உறவினர்கள்

மெக்சிகோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கரடி புகுந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நடுங்க வைத்துள்ளது. 15 வயது சாண்டியாகோ எனும் சிறுவன் தனது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்.

இதன்போது அவரது தட்டில் Tacos எனும் மெக்சிகோவின் பிரபல உணவு இருந்தது. இந்நிலையில் அவரது உணவு மீது, கரடி ஒன்று திடீரென்று தாவியதால் அச்சத்தில் சிறுவன் தாயாரிடம் தஞ்சமடைந்தான்.

எனினும் கரடியார் சாண்டியாகோ கை எட்டும் தூரத்தில்தான் இருந்தபோதும், உணவுக்காகவே வந்ததுபோல சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து அமைதியாக வெளியேறிவிட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version