Site icon Tamil News

IMF பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்த தொழிற்சங்க குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் இன்று (20.09) சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தது.

குறித்த மகஜரில், வரிக்கொள்கையை திருத்தியமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கவனம் செலுத்தவில்லை என்றால், எதிர்காலத்தில் கடுமையான போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, வாழ்க்கைச் செலவு கட்டுப்படியாகாத வகையில் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து உழைக்கும் வர்க்க மக்களுக்கும் 20,000 ரூபா கொடுப்பனவை கோரி போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version