Site icon Tamil News

பொருளாதார நெருக்கடியால் இலங்கையை சேர்ந்த 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று   தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 244 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் 8 ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த இரண்டு ஆண்கள்,  நான்கு பெண்கள்,  மூன்று ஆண்குழந்தை ஒரு பெண் குழந்தை உட்பட 10 பேர் முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து நேற்று இரவு பைபர் படகில் புறப்பட்டு  தனுஷ்கோடி அடுத்துள்ள முதல் மணல் திட்டிற்கு சென்றுள்ளனர்.

இலங்கை தமிழர்கள் மணல் திட்டில் காத்திருப்பதை கண்ட அப்பகுதியில் மீன் பிடித்த நாட்டுப்படகு மீனவர்கள் மரைன் காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version