Site icon Tamil News

அமெரிக்காவில் பொது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய திருடன் – வீடுகளில் சிக்கிய கடிதம்

அமெரிக்காவில் வீடுகளுக்குள் புகுந்து கடிதம் விட்டுச்செல்லும் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

வாஷிங்டன் மாநிலத்தில் Yelm வட்டாரத்தில் Clearwood பகுதியில் ஒருவர் தனது வீட்டுக்குள் சென்றபோது மேசையில் ஒரு கடிதத்தை அவதானித்துள்ளார்.

‘எனக்கு மிகவும் பசித்ததால் வீட்டிற்குள் புகுந்தேன். என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களுடைய உணவைச் சாப்பிட்டேன். நான் குளித்தேன்…ஆடைகளைச் சலவை செய்தேன்,’ என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

வீட்டின் சன்னல் உடைந்திருப்பதையும் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடப்பதையும் கண்ட Eddie Andujo என்ற நபர் அதிர்ச்சியடைந்தார்.

ஆனால் வீட்டிலிருந்து எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. வீட்டுக்குள் புகுந்தவர் தாம் பயன்படுத்திய போர்வைகளை மடித்து வைத்துள்ளதுடன், தட்டுகளைக் கழுவி வைத்துள்ளார்.

அடுத்த சில நாள்களில் அண்டை வீடுகளிலும் ஒருவர் அத்துமீறிப் புகுந்தது தெரியவந்துள்ளது.

Exit mobile version